உறுதி - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 20, 2018

உறுதி

 பாலைவனப் பூ ஒன்று
 பக்குவமாய் சொல்கிறது
 நீர் ஆகாரம் எதுவுமின்றி 
 சிரிக்கின்றேன் நான்.
 பட்டமரம் ஒன்று
 பறைகிறது
 பச்சையம் ஏதுமின்றி
 வேரூன்றி இருக்கிறேன் நான்.
 காற்றோடு கதைபயிலும் 
 மெல்லிய கொடி ஒன்று
 மெல்லமாய் சொல்கிறது
 ஆதாரம் ஏதுமின்றி
 வாழ்கிறேன் நான்.
 மனதில் உறுதி கொண்டால்
 வாழ்ந்து விடலாம்
 பூமியிலே
 ஊனம் ஒரு குறையல்ல
 உள்ளம் நிறைந்திருக்கும் போது....


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here